சென்னை: திமுகவில் உட்கட்சி ஜனநாயக செத்துபோய்விட்டது.. திமுக அழிவுக்கு காரணமே திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிதான் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தென் மண்டல அமைப்பு செயலர் மு.க. அழகிரி காட்டமாக விமர்சித்துள்ளார்.
திமுகவில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகனும் தென் மண்டல அமைப்பு செயலருமான மு.க. அழகிரி நேற்று தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தமது நீக்கம் குறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டி விவரம்:
கேள்வி: உங்கள் மீது தி.மு.க. தலைமை எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?. பதில்: என்னை நீக்கியதை பற்றி என்னிடமே கேட்கிறீர்களா?. நியாயம் என்றும் வெல்லும். அவ்வளவுதான். ஜனநாயகம் இல்லை. அந்த கட்சியில் ஜனநாயகம் செத்துப்போய்விட்டது.
கேள்வி: நீங்கள் குழப்பம் விளைவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறதே?. பதில்: நான் ஒன்றும் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. நான் 3 நாள் ஹாங்காங் சென்றுவிட்டு நேற்று இரவு தான் வந்தேன். ஹாங்காங்கில் போய் நான் கட்சிக்கு எதிராக தவறாக ஏதாவது செய்துவிட்டேனா? ஒன்றுமில்லை. 5 பேர் மீது நடவடிக்கை எடுத்தார்கள். அதற்கு காரணம் கேட்டேன். அதற்காகத்தான் இந்த நடவடிக்கை. அதாவது கட்சிக்காரர்களுக்காக எதுவும் செய்யக்கூடாது. கட்சிக்காக உழைத்த கட்சிக்காரர்களுக்காக நான் கேட்டேன். இன்றைக்கு புதிதாக வந்த கட்சிக்காரர்கள் இவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். நேற்று வரை அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் இவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். அவ்வளவு தான்.
திமுகவில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகனும் தென் மண்டல அமைப்பு செயலருமான மு.க. அழகிரி நேற்று தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தமது நீக்கம் குறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டி விவரம்:
கேள்வி: உங்கள் மீது தி.மு.க. தலைமை எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?. பதில்: என்னை நீக்கியதை பற்றி என்னிடமே கேட்கிறீர்களா?. நியாயம் என்றும் வெல்லும். அவ்வளவுதான். ஜனநாயகம் இல்லை. அந்த கட்சியில் ஜனநாயகம் செத்துப்போய்விட்டது.
கேள்வி: நீங்கள் குழப்பம் விளைவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறதே?. பதில்: நான் ஒன்றும் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. நான் 3 நாள் ஹாங்காங் சென்றுவிட்டு நேற்று இரவு தான் வந்தேன். ஹாங்காங்கில் போய் நான் கட்சிக்கு எதிராக தவறாக ஏதாவது செய்துவிட்டேனா? ஒன்றுமில்லை. 5 பேர் மீது நடவடிக்கை எடுத்தார்கள். அதற்கு காரணம் கேட்டேன். அதற்காகத்தான் இந்த நடவடிக்கை. அதாவது கட்சிக்காரர்களுக்காக எதுவும் செய்யக்கூடாது. கட்சிக்காக உழைத்த கட்சிக்காரர்களுக்காக நான் கேட்டேன். இன்றைக்கு புதிதாக வந்த கட்சிக்காரர்கள் இவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். நேற்று வரை அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் இவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். அவ்வளவு தான்.