அபுதாபி: டி.ஆர்.எஸ்., முறையில் ஏற்படும் குழப்பங்களை குறைத்து, துல்லியமான முடிவுகளை எடுக்க, ஒ.ஆர்.எஸ்.,, முறை அறிமுகமாகியுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2008 முதல், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை(டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் படி, அம்பயர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து ஒரு அணி ஒரு இன்னிங்சில் 2 முறை அப்பீல் செய்யலாம்.
இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) துவக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. இதனால் இந்திய அணி பங்கேற்கும் தொடர்களில், டி.ஆர்.எஸ்., பயன்படுத்தப்படுவது இல்லை.
பெரும் சர்ச்சை:
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில், இம்முறை பெரும் சர்ச்சையை கிளப்பியது. மிகத்துல்லியமாக பேட்டில் பந்து படும்பட்சத்தில், அதனை ‘ஹாட் ஸ்பாட்’ தொழில்நுட்பத்தில் கண்டறிய முடியவில்லை.
புதிய முறை:
இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், இதில் உள்ள குறைகளை சரிசெய்யும் வகையில், புதியதாக ‘தி அபிசியேட்டிங் ரீப்ளே சிஸ்டம்’ (ஒ.ஆர்.எஸ்.,) என்ற முறையை, அறிமுகம் செய்துள்ளனர்.
வேகம் அதிகம்:
இதன்படி, ‘டிவி’ அம்பயர்கள் பிரத்யேக அறையில் அமர்ந்து, ‘மெகா ஸ்கிரீன்’பல்வேறு கோணங்களில் ‘ரீப்ளே’ பார்த்து மிக வேகமாகவும் துல்லியமாகவும் முடிவுகளை வழங்கலாம்.
தற்போது, நடக்கும் இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில், இது சோதனை அடிப்படையில், பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஐ.சி.சி.,யின் தொழில்நுட்ப மறுபரிசீலனை குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், டி.ஆர்.எஸ்., முறையுடன், ஒ.ஆர்.எஸ்., சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
ஒ.ஆர்.எஸ்., மூலம் கிடைக்கும் நன்மைகள் விவரம்:
டி.ஆர்.எஸ்.,
* போட்டியை ஒளிபரப்பும் நிறுவனம், ‘ரீப்ளே’ தரும்வரை, ‘டி.வி’ அம்பயர் காத்திருக்க வேண்டும்.
* மூன்றாவது அம்பயருக்கு கிடைக்கும் ‘ரீப்ளே’, எப்போதும் தெளிவாக இருக்காது.
* சரியான ‘ரீப்ளேயை’ தேர்வு செய்ய, குறைந்தது 30 வினாடி தேவைப்படும்.
* இதற்கான செலவுகளை ‘டிவி’ ஒளிபரப்பு நிறுவனம் ஏற்க வேண்டும்.
* ‘டிவி’ நிறுவனங்கள் சரியான ‘ரீப்ளே’ கிடைக்கவில்லை என்று கூறி சமாளித்து விடலாம்.
ஒ.ஆர்.எஸ்.,
* ‘ரீப்ளே’ பார்ப்பது, முடிவு எடுப்பது போன்றவை ‘டி.வி’ அம்பயரிடம் இருக்கும்
* உயர்ரக தொழில்நுட்பத்தில் 16 ‘பிரேம்கள்’, 5 வினாடியில் அம்பயருக்கு கிடைத்து விடும்.
* வேகமாக, துல்லியமாக முடிவுகளை எடுக்கலாம்.
* அம்பயர்களுக்கு தேவையான வசதிகளை நிர்வாகம் தான் ஏற்படுத்த வேண்டும். இதனால், இங்கு செலவு பிரச்னை உள்ளது.
* இறுதி முடிவு அம்பயர் எடுப்பதால், ‘டிவி’ ஒளிபரப்பாளர்கள் வேண்டுமென்றே தவறு செய்து விடுவர் என்ற பயம் தேவையில்லை.
கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2008 முதல், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை(டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் படி, அம்பயர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து ஒரு அணி ஒரு இன்னிங்சில் 2 முறை அப்பீல் செய்யலாம்.
இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) துவக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. இதனால் இந்திய அணி பங்கேற்கும் தொடர்களில், டி.ஆர்.எஸ்., பயன்படுத்தப்படுவது இல்லை.
பெரும் சர்ச்சை:
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில், இம்முறை பெரும் சர்ச்சையை கிளப்பியது. மிகத்துல்லியமாக பேட்டில் பந்து படும்பட்சத்தில், அதனை ‘ஹாட் ஸ்பாட்’ தொழில்நுட்பத்தில் கண்டறிய முடியவில்லை.
புதிய முறை:
இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், இதில் உள்ள குறைகளை சரிசெய்யும் வகையில், புதியதாக ‘தி அபிசியேட்டிங் ரீப்ளே சிஸ்டம்’ (ஒ.ஆர்.எஸ்.,) என்ற முறையை, அறிமுகம் செய்துள்ளனர்.
வேகம் அதிகம்:
இதன்படி, ‘டிவி’ அம்பயர்கள் பிரத்யேக அறையில் அமர்ந்து, ‘மெகா ஸ்கிரீன்’பல்வேறு கோணங்களில் ‘ரீப்ளே’ பார்த்து மிக வேகமாகவும் துல்லியமாகவும் முடிவுகளை வழங்கலாம்.
தற்போது, நடக்கும் இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில், இது சோதனை அடிப்படையில், பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஐ.சி.சி.,யின் தொழில்நுட்ப மறுபரிசீலனை குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், டி.ஆர்.எஸ்., முறையுடன், ஒ.ஆர்.எஸ்., சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
ஒ.ஆர்.எஸ்., மூலம் கிடைக்கும் நன்மைகள் விவரம்:
டி.ஆர்.எஸ்.,
* போட்டியை ஒளிபரப்பும் நிறுவனம், ‘ரீப்ளே’ தரும்வரை, ‘டி.வி’ அம்பயர் காத்திருக்க வேண்டும்.
* மூன்றாவது அம்பயருக்கு கிடைக்கும் ‘ரீப்ளே’, எப்போதும் தெளிவாக இருக்காது.
* சரியான ‘ரீப்ளேயை’ தேர்வு செய்ய, குறைந்தது 30 வினாடி தேவைப்படும்.
* இதற்கான செலவுகளை ‘டிவி’ ஒளிபரப்பு நிறுவனம் ஏற்க வேண்டும்.
* ‘டிவி’ நிறுவனங்கள் சரியான ‘ரீப்ளே’ கிடைக்கவில்லை என்று கூறி சமாளித்து விடலாம்.
ஒ.ஆர்.எஸ்.,
* ‘ரீப்ளே’ பார்ப்பது, முடிவு எடுப்பது போன்றவை ‘டி.வி’ அம்பயரிடம் இருக்கும்
* உயர்ரக தொழில்நுட்பத்தில் 16 ‘பிரேம்கள்’, 5 வினாடியில் அம்பயருக்கு கிடைத்து விடும்.
* வேகமாக, துல்லியமாக முடிவுகளை எடுக்கலாம்.
* அம்பயர்களுக்கு தேவையான வசதிகளை நிர்வாகம் தான் ஏற்படுத்த வேண்டும். இதனால், இங்கு செலவு பிரச்னை உள்ளது.
* இறுதி முடிவு அம்பயர் எடுப்பதால், ‘டிவி’ ஒளிபரப்பாளர்கள் வேண்டுமென்றே தவறு செய்து விடுவர் என்ற பயம் தேவையில்லை.