ஆந்திராவைச்சேர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தமிழில் விதார்த்துடன் காட்டுமல்லி என்ற படத்தில்தான் முதலில் கமிட்டாகி நடித்து வந்தார். ஆனால், அப்படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதையடுத்துதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார்.
ஆனால் இரண்டாவதாக அவர் நடித்த படம் முதலில் வெளியாகி ஸ்ரீதிவ்யாவுக்கு பெரிய ஹிட்டாக அமைந்து விட்டது. அதனால் இப்போது 4 படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து வரும் நடிகையாகி விட்டார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனுடனும் மீண்டும் ஜோடி சேருகிறார் ஸ்ரீதிவ்யா. தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் பட டீம் மீண்டும் இணையும் இந்த படத்தில், அந்த டீமில் முன்பு இடம்பெற்றிருந்த ப்ரியாஆனந்த் இப்போது இல்லையாம்.
இதுவரை அவரது பெயரை பரிசீலணையில் வைத்திருந்தவர்கள், கடைசி நேரத்தில், அவரது மார்க்கெட் மந்தமாக இருப்பதால், ஸ்ரீதிவ்யா பக்கம் சாய்ந்து விட்டார்களாம். இந்த சேதி ஸ்ரீதிவ்யாவின் காதுக்கு சென்றபோது செம குஷியாகி விட்டாராம்.
காரணம், தனுஷ் தயாரிக்கும் படம் மட்டுமின்றி, தனது அபிமானத்திற்குரிய சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என்பதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரது ஆஸ்தான நாயகி பட்டியலிலும் இடம்பிடித்து விட வேண்டும் என்று தனது கவுண்டவுனை ஸ்டார்ட் பண்ணியிருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா. அதேசமயம் ஸ்ரீதிவ்யா தான் நாயகி என படக்குழு உறுதி செய்யவில்லை.
ஆனால் இரண்டாவதாக அவர் நடித்த படம் முதலில் வெளியாகி ஸ்ரீதிவ்யாவுக்கு பெரிய ஹிட்டாக அமைந்து விட்டது. அதனால் இப்போது 4 படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து வரும் நடிகையாகி விட்டார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனுடனும் மீண்டும் ஜோடி சேருகிறார் ஸ்ரீதிவ்யா. தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் பட டீம் மீண்டும் இணையும் இந்த படத்தில், அந்த டீமில் முன்பு இடம்பெற்றிருந்த ப்ரியாஆனந்த் இப்போது இல்லையாம்.
இதுவரை அவரது பெயரை பரிசீலணையில் வைத்திருந்தவர்கள், கடைசி நேரத்தில், அவரது மார்க்கெட் மந்தமாக இருப்பதால், ஸ்ரீதிவ்யா பக்கம் சாய்ந்து விட்டார்களாம். இந்த சேதி ஸ்ரீதிவ்யாவின் காதுக்கு சென்றபோது செம குஷியாகி விட்டாராம்.
காரணம், தனுஷ் தயாரிக்கும் படம் மட்டுமின்றி, தனது அபிமானத்திற்குரிய சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என்பதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரது ஆஸ்தான நாயகி பட்டியலிலும் இடம்பிடித்து விட வேண்டும் என்று தனது கவுண்டவுனை ஸ்டார்ட் பண்ணியிருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா. அதேசமயம் ஸ்ரீதிவ்யா தான் நாயகி என படக்குழு உறுதி செய்யவில்லை.