புதுடில்லி : ''வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல், விரைவில் வெளியிடப்படும். காங்கிரசாரின் விருப்பத்திற்கு ஏற்ப, புதிய முறையில், வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றுள்ளது,'' என, அக்கட்சியின் துணைத் தலைவர், ராகுல் நேற்ற கூறினார்.
லோக்சபா தேர்தலில், மாநிலங்களில், காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் கமிட்டிக்கு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுடன், கட்சியின் முன்னணித் தலைவர்கள் சந்திக்கும் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பின், நிருபர்களை சந்தித்த, ராகுல் கூறியதாவது:வேட்பாளர்கள் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என, காங்கிரசார் தங்கள் விருப்பத்தை, மேலிடத்தில் தெரிவித்திருந்தனர். அவர்களின் விருப்பப்படி, வேட்பாளர்கள் தேர்வு, புதிய முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியல், விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
லோக்சபா தேர்தலில், மாநிலங்களில், காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் கமிட்டிக்கு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுடன், கட்சியின் முன்னணித் தலைவர்கள் சந்திக்கும் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பின், நிருபர்களை சந்தித்த, ராகுல் கூறியதாவது:வேட்பாளர்கள் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என, காங்கிரசார் தங்கள் விருப்பத்தை, மேலிடத்தில் தெரிவித்திருந்தனர். அவர்களின் விருப்பப்படி, வேட்பாளர்கள் தேர்வு, புதிய முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியல், விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.