அஜீத்-விஜய் இருவரும் வெளி உலகத்துக்கு நண்பர்களாக தங்களை காட்டிக்கொண்டாலும், தொழில் போட்டி என்று வருகிறபோது எதிரும் புதிருமாகி விடுகிறார்கள். அதனால்தான் அவர்களின் ஒவ்வொரு படங்களும் வெளியாகிறபோதும் அவர்களது ரசிகர் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அந்த வகையில், 7 வருடங்களுக்கு பிறகு இன்று அஜீத்தின் வீரமும், விஜய்யின் ஜில்லாவும் திரைக்கு வந்திருப்பதால், தமிழகமெங்கிலும் மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாகவே தங்கள் அபிமான ஹீரோக்களின் பேனர்கள், கட்அவுட்கள் வைப்பதில் மும்முரமாகியிருந்தனர். இதனால் பல ஏரியக்களில் மோதல்களும் வெடித்தது. இப்படி போட்டி போட்டு விஜய்-அஜீத் ரசிகர்கள் வைத்திருக்கும் கட்அவுட்களில் அஜீத் ரசிகர்கள்தான் பிரமாண்டமான கட்அவுட்களை அதிகமான தியேட்டர்களில் நிறுத்தியுள்ளார்களாம்.
அதில் நெல்லையில் உள்ள பாம்பே தியேட்டரின் முன்னே நிறுத்தப்பட்டிருக்கும் அஜீத்தின் கட்அவுட் 90 அடி உயரத்தில் வானத்தையே எட்டிப்பிடிப்பது போல் நிற்கிறதாம். வீரம் பட்த்தில் அவர் நடித்துள்ள வேஷ்டி சட்டை கெட்டப்பில் உருவாகியுள்ள இந்த கட்அவுட்தான் இதுவரை வைக்கப்பட்ட கட்அவுட்களில் அதிக உயரம் கொண்டது என்கிறார்கள்.
அதேப்போல் விஜய் ரசிகர்களும், நாங்களும் சலித்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் 80 அடி உயரத்தில் ஒரு பிரமாண்ட கட்-அவுட்டை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்திலுள்ள முக்கிய தியேட்டர்களில் ராட்சத கட்அவுட்களை வைத்திருக்கும் இருவரது ரசிகர்களும், இன்று மேளதாளங்களுடன் பாலாபிஷேகமும் நடத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தங்களது அபிமான ஹீரோக்களின் படங்களை வெகு விமரிசையாக வரவேற்று கொண்டாடிவிட்டனர்.
அதில் நெல்லையில் உள்ள பாம்பே தியேட்டரின் முன்னே நிறுத்தப்பட்டிருக்கும் அஜீத்தின் கட்அவுட் 90 அடி உயரத்தில் வானத்தையே எட்டிப்பிடிப்பது போல் நிற்கிறதாம். வீரம் பட்த்தில் அவர் நடித்துள்ள வேஷ்டி சட்டை கெட்டப்பில் உருவாகியுள்ள இந்த கட்அவுட்தான் இதுவரை வைக்கப்பட்ட கட்அவுட்களில் அதிக உயரம் கொண்டது என்கிறார்கள்.
அதேப்போல் விஜய் ரசிகர்களும், நாங்களும் சலித்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் 80 அடி உயரத்தில் ஒரு பிரமாண்ட கட்-அவுட்டை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்திலுள்ள முக்கிய தியேட்டர்களில் ராட்சத கட்அவுட்களை வைத்திருக்கும் இருவரது ரசிகர்களும், இன்று மேளதாளங்களுடன் பாலாபிஷேகமும் நடத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தங்களது அபிமான ஹீரோக்களின் படங்களை வெகு விமரிசையாக வரவேற்று கொண்டாடிவிட்டனர்.