சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவதையொட்டி போயஸ் கார்டனில் இன்று அதிகாலை பூஜை நடந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.
அதிகாலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா நடத்திய சிறப்பு பூஜை!
இதையொட்டி சென்னை கோட்டூர்புரம் விநாயகர் கோவில் பூசாரி உள்பட பல பூசாரிகள் இன்று அதிகாலை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்து சிறப்பு பூஜை நடத்தினர். தனது வீட்டு வாசலில் குவிந்திருந்த அதிமுகவினரை பார்த்து ஜெயலலிதா வெற்றி சின்னமாக இரண்டு விரலை காண்பித்துவிட்டு பெங்களூர் கிளம்பினார்.
அவர் தனக்கு பிடித்த பச்சை நிற புடவையை அணிந்து சென்றுள்ளார். ஜெயலலிதா பெங்களூரில் இருந்து திரும்பி வரும் எங்கும் செல்ல மாட்டோம் என்று கூறி அதிகமுகவினர் போயஸ் கார்டனில் நின்று கொண்டிருக்கின்றனர்.
வழக்கில் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு சாதமாக வருவது போன்ற பேனர்களையும், பட்டாசுகளையும் வைத்துக் கொண்டு அவர்கள் போயஸ் கார்டனில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.
அதிகாலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா நடத்திய சிறப்பு பூஜை!
இதையொட்டி சென்னை கோட்டூர்புரம் விநாயகர் கோவில் பூசாரி உள்பட பல பூசாரிகள் இன்று அதிகாலை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்து சிறப்பு பூஜை நடத்தினர். தனது வீட்டு வாசலில் குவிந்திருந்த அதிமுகவினரை பார்த்து ஜெயலலிதா வெற்றி சின்னமாக இரண்டு விரலை காண்பித்துவிட்டு பெங்களூர் கிளம்பினார்.
அவர் தனக்கு பிடித்த பச்சை நிற புடவையை அணிந்து சென்றுள்ளார். ஜெயலலிதா பெங்களூரில் இருந்து திரும்பி வரும் எங்கும் செல்ல மாட்டோம் என்று கூறி அதிகமுகவினர் போயஸ் கார்டனில் நின்று கொண்டிருக்கின்றனர்.
வழக்கில் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு சாதமாக வருவது போன்ற பேனர்களையும், பட்டாசுகளையும் வைத்துக் கொண்டு அவர்கள் போயஸ் கார்டனில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.