தமிழ் நடிகனான எனக்கு வீரம் படம்தான் நிஜமான அடையாளத்தையும் வெற்றியையும் தந்துள்ளது என்கிறார் நடிகர் பாலா.
அன்பு என்று ஒரு படம் வந்ததே... நினைவிருக்கிறதா? அழகி என்ற அபார வெற்றிப் படம் தந்த நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில்தான் பாலா அறிமுகமானார். சுத்தத் தமிழ் நடிகர். தொடர்ந்து தொடர்ந்து 'காதல்கிசுகிசு' 'அம்மா அப்பா செல்லம்' போன்ற சில படங்களில் நடித்தார். ஆனால் அவை வெற்றி பெறவில்லை. அந்தக் குறையைப் போக்கியுள்ளது வீரம் படம்.
இந்த பாலா நம் மண்ணின் மைந்தன். அதுவும் நீண்ட சினிமா பாரம்பர்யம் கொண்டவர்.
பாலாவின் தந்தை ஜெயக்குமார் 426 ஆவணப் படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் இயக்கியவர். தாத்தா ஏ. கே. வேலன் தயாரிப்பாளர். அருணாச்சலம் ஸ்டுடியோவின் அதிபர். சகோதரர் சிவா இயக்குநர். சாதாரண இயக்குநர் இல்லீங்க... சிறுத்தை, வீரம் படங்களின் இயக்குநர்!!
தமிழில் அறிமுகமானாலும் படங்கள் வெற்றி பெறாததால் மலையாளப் பக்கம் போனார். 'பிக்'பி' என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் முதல் படத்திலேயே வெற்றியும் பாராட்டும் விருதும் கிடைத்தன.
அதன் பிறகு மளமளவென படங்கள். மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, ப்ருத்விராஜ் என பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். பிறகு தனி நாயகனாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றி பெற்றார். ஒரே ஆண்டில் 9 படங்கள் நடிக்கும் அளவுக்குப் பரபரப்பானார். மலையாளத்தில் தொடர்ச்சியாக 40 படங்கள் நடித்துள்ளார். 'வீரம்' இவரது 44 வது படம் என்றால் பாருங்கள்!
அன்பு என்று ஒரு படம் வந்ததே... நினைவிருக்கிறதா? அழகி என்ற அபார வெற்றிப் படம் தந்த நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில்தான் பாலா அறிமுகமானார். சுத்தத் தமிழ் நடிகர். தொடர்ந்து தொடர்ந்து 'காதல்கிசுகிசு' 'அம்மா அப்பா செல்லம்' போன்ற சில படங்களில் நடித்தார். ஆனால் அவை வெற்றி பெறவில்லை. அந்தக் குறையைப் போக்கியுள்ளது வீரம் படம்.
இந்த பாலா நம் மண்ணின் மைந்தன். அதுவும் நீண்ட சினிமா பாரம்பர்யம் கொண்டவர்.
பாலாவின் தந்தை ஜெயக்குமார் 426 ஆவணப் படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் இயக்கியவர். தாத்தா ஏ. கே. வேலன் தயாரிப்பாளர். அருணாச்சலம் ஸ்டுடியோவின் அதிபர். சகோதரர் சிவா இயக்குநர். சாதாரண இயக்குநர் இல்லீங்க... சிறுத்தை, வீரம் படங்களின் இயக்குநர்!!
தமிழில் அறிமுகமானாலும் படங்கள் வெற்றி பெறாததால் மலையாளப் பக்கம் போனார். 'பிக்'பி' என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் முதல் படத்திலேயே வெற்றியும் பாராட்டும் விருதும் கிடைத்தன.
அதன் பிறகு மளமளவென படங்கள். மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, ப்ருத்விராஜ் என பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். பிறகு தனி நாயகனாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றி பெற்றார். ஒரே ஆண்டில் 9 படங்கள் நடிக்கும் அளவுக்குப் பரபரப்பானார். மலையாளத்தில் தொடர்ச்சியாக 40 படங்கள் நடித்துள்ளார். 'வீரம்' இவரது 44 வது படம் என்றால் பாருங்கள்!