பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா சனிக்கிழமை இரவு ஓ. பன்னீர் செல்வம் வாங்கிக் கொடுத்த அடையாறு ஆனந்த பவன் சாப்பாட்டை சாப்பிட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு அளித்தது. இதையடுத்து ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக தீர்ப்பை அறிவித்தவுடன் தனக்கு மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் விவிஐபி செல்லில் அறை எண் 23ல் அடைக்கப்பட்டார்.
நேற்றிரவு சிறைக் கைதிகளுக்கு உணவாக கேழ்வரகு உருண்டை, சாதம், சாம்பார், தயிர் சாதம், ஊறுகாய் ஆகியவை தான் வழங்கப்பட்டன. ஆனால் ஜெயலலிதா சிறை உணவை சாப்பிடவில்லை. மாறாக ஓ. பன்னீர் செல்வம் வாங்கி வந்து கொடுத்த அடையாறு ஆனந்த பவன் இட்லியை சாப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா வி.வி.ஐ.பி. கைதி என்பதால் வெளி உணவை அனுமதித்துள்ளனர். அவர் தினமும் வெளி உணவை சாப்பிட அனுமதிக்கப்படும் என்றே தெரிகிறது. இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள ஜெயலலிதாவுக்கு சிறையில் 24 மணிநேரமும் சிறப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணிக்கு வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட 3 இட்லி, சாம்பார், சட்னி ஆகியவற்றை ஜெயலலிதா சாப்பிட்டார். 8 மணிக்கு ஒரு கிளாஸ் பால் குடித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு அளித்தது. இதையடுத்து ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக தீர்ப்பை அறிவித்தவுடன் தனக்கு மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் விவிஐபி செல்லில் அறை எண் 23ல் அடைக்கப்பட்டார்.
நேற்றிரவு சிறைக் கைதிகளுக்கு உணவாக கேழ்வரகு உருண்டை, சாதம், சாம்பார், தயிர் சாதம், ஊறுகாய் ஆகியவை தான் வழங்கப்பட்டன. ஆனால் ஜெயலலிதா சிறை உணவை சாப்பிடவில்லை. மாறாக ஓ. பன்னீர் செல்வம் வாங்கி வந்து கொடுத்த அடையாறு ஆனந்த பவன் இட்லியை சாப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா வி.வி.ஐ.பி. கைதி என்பதால் வெளி உணவை அனுமதித்துள்ளனர். அவர் தினமும் வெளி உணவை சாப்பிட அனுமதிக்கப்படும் என்றே தெரிகிறது. இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள ஜெயலலிதாவுக்கு சிறையில் 24 மணிநேரமும் சிறப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணிக்கு வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட 3 இட்லி, சாம்பார், சட்னி ஆகியவற்றை ஜெயலலிதா சாப்பிட்டார். 8 மணிக்கு ஒரு கிளாஸ் பால் குடித்துள்ளார்.