வாயில்லா ஜீவன் என்று பசுவைச் சொல்கிறோம். ஆனாலும், விலங்கினங்களில் பசு இனம் மட்டுமே அடிவயிற்றிலிருந்து அம்மா என்று அழைத்து, அன்பை வெளிப்படுத்துகிறது. அம்மா என்ற சொல்லுக்கு, அன்பால் தன் குழந்தைக்கு பாலூட்டி சீராட்டுபவள் என்று பொருள். ஆனால், பெற்றவள் இளம் வயதில் மட்டுமே பால் தருவாள். பசுவோ, இளம் வயது முதல் முதுமை வரை நமக்கு பால் தருகிறது.
அது மட்டுமல்ல! மனிதனுக்கு உயிர் போன பின்பும் கூட பாலூற்றுதல் என்ற சடங்கு உண்டு. இப்படி, நம்மோடு என்றும் பிரிக்க முடியாத உறவாக இருப்பதால் பசுவைக் கோமாதா என்று போற்றி வழிபாடு செய்கிறோம்.
காளை நம் வயல்களை உழுகிறது, அறுவடைப் பணியில் உதவுகிறது. வண்டி இழுக்கிறது. உழைப்பின் சின்னமாய் விளங்குகிறது. அவற்றுக்கு நன்றி செலுத்தும் நாளே மாட்டுப்பொங்கல்.
மாட்டுப்பொங்கல் மாலை நேரத்தில் வைப்பது ஏன்?: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும் காரணம் உண்டு.
கண்ணன் காலையில் பசுக்களை ஓட்டிக் கொண்டு பிருந்தாவனத்திற்கு மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, மாலையில் குழலூதியபடியே ஆயர்பாடிக்கு திரும்பி வருவான். அதனால் மாட்டுப்பொங்கலை மாலையில் வைக்கும் வழக்கம் உண்டானது. பசுக்களை நீராட்டி, கொம்புகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்துவர்.
பசுவின் கழுத்தில் மணியும், வேட்டியும் கட்டுவர். மாட்டுக் கொட்டிலின் முன் பொங்கலிட்டு, காளை, பசுவிற்குப் படையலிடுவர். பொங்கல் பொங்கும்போது, பட்டிபெருக பால் பானை பொங்க என்று சொல்லி குலவையிடுவர். அதன்பின்னர், பசுமாட்டை கோயிலுக்கும், காளை மாட்டை மஞ்சுவிரட்டுக்கும் அழைத்துச் செல்வர்.
அது மட்டுமல்ல! மனிதனுக்கு உயிர் போன பின்பும் கூட பாலூற்றுதல் என்ற சடங்கு உண்டு. இப்படி, நம்மோடு என்றும் பிரிக்க முடியாத உறவாக இருப்பதால் பசுவைக் கோமாதா என்று போற்றி வழிபாடு செய்கிறோம்.
காளை நம் வயல்களை உழுகிறது, அறுவடைப் பணியில் உதவுகிறது. வண்டி இழுக்கிறது. உழைப்பின் சின்னமாய் விளங்குகிறது. அவற்றுக்கு நன்றி செலுத்தும் நாளே மாட்டுப்பொங்கல்.
மாட்டுப்பொங்கல் மாலை நேரத்தில் வைப்பது ஏன்?: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும் காரணம் உண்டு.
கண்ணன் காலையில் பசுக்களை ஓட்டிக் கொண்டு பிருந்தாவனத்திற்கு மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, மாலையில் குழலூதியபடியே ஆயர்பாடிக்கு திரும்பி வருவான். அதனால் மாட்டுப்பொங்கலை மாலையில் வைக்கும் வழக்கம் உண்டானது. பசுக்களை நீராட்டி, கொம்புகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்துவர்.
பசுவின் கழுத்தில் மணியும், வேட்டியும் கட்டுவர். மாட்டுக் கொட்டிலின் முன் பொங்கலிட்டு, காளை, பசுவிற்குப் படையலிடுவர். பொங்கல் பொங்கும்போது, பட்டிபெருக பால் பானை பொங்க என்று சொல்லி குலவையிடுவர். அதன்பின்னர், பசுமாட்டை கோயிலுக்கும், காளை மாட்டை மஞ்சுவிரட்டுக்கும் அழைத்துச் செல்வர்.