சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடனும் மண்ணின் மணத்துடனும் கொண்டாடினர்.
தமிழர்களின் வாழ்வாதாரமான உழவுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மண்ணுக்கு உரிய கலாச்சாரத்துடன் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.
புதுப் பானையில் புத்தரிசி போட்டு பொங்கலிட்டு தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கரும்பு, மஞ்சள், புத்தாடை, வாசலில் வண்ணக் கோலங்கள், வீடுகளில் விருந்தினரை வரவேற்கும் தோரணங்கள் என ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பொங்கலை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பொங்கல் நாளில் கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
தமிழர்களின் வாழ்வாதாரமான உழவுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மண்ணுக்கு உரிய கலாச்சாரத்துடன் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.
புதுப் பானையில் புத்தரிசி போட்டு பொங்கலிட்டு தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கரும்பு, மஞ்சள், புத்தாடை, வாசலில் வண்ணக் கோலங்கள், வீடுகளில் விருந்தினரை வரவேற்கும் தோரணங்கள் என ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பொங்கலை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பொங்கல் நாளில் கோவில்களில் கூட்டம் அலைமோதியது.