மன்சூரலிகான் ஒரு படத்தை தொடங்கினாலே அதில் ஏதாவது விபரீதங்கள் இருக்கும். எல்லோரும் அபசகுணமாக நினைக்கும் பூனையை குறுக்கே ஓட விட்டு முதல் நாள் படப்பிடிப்புக்கு கிளம்புவார்.
நல்ல நேரம் பார்த்து தொடங்க வேண்டும் என்றால், இவர், ராகுகாலம், எமகண்டத்துக்காக காத்திருந்து கேமராவை ஓப்பன் செய்வார். அந்த அளவுக்கு மற்றவர்களிடமிருந்து எதிர்மறையாக செய்யும் மன்சூரலிகான், லொள்ளு தாதா பராக் பராக் படத்தையடுத்து, இப்போது அதிரடி என்றொரு படத்தை தொடங்கியிருக்கிறார்.
அதிரடி என்ற பெயருக்கேற்ப சில அதிரடிகளையும் இப்படத்தில் செய்கிறாராம் மன்சூர். அதாவது, இதுவரை தயாரிப்பு, நடிப்பு, டைரக்டர் என்பதோடு தனது எல்லையை நிறுத்திக்கொண்டவர், இந்த படத்தில் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என்று மேலும் சில அதிரடி அவதாரங்களை எடுக்கிறாராம்.
அதனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பாடல்களுக்கான டியூனை ரெடி பண்ணி விட்டாராம் அவர். டி.ராஜேந்தர் பாணியில் டேபிளில் அடித்துக்கொண்டே டியூன் போட்டு சில பாடல்களை ரெடி பண்ணி வைத்துள்ளாராம்.
அப்படி தான் உருவாக்கிய டியூன்களை, தன்னை சந்திக்க வரும் சினிமா நண்பர்களிடம், தாளம் தட்டிக்கொண்டே பாடிக்காட்டுகிறாராம் மன்சூர்.
அதோடு, நில்லாமல், இந்த படத்தில் எனக்கு மற்றவர்கள் பின்னணி பாடுவதை விட நானே பாடினால் ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்பதால் எனக்கான பாடல்களை நானே பின்னணியும் பாடப்போகிறேன் என்று சொல்லி, மொத்த பாடல்களையும் தாளம் தட்டியபடி மெய்மறந்து பாடுகிறாராம்.
அதோடு இப்போது இசையால் உங்களை தாலாட்டியது போன்று அதிரடி படம் மூலம் டோட்டல் தமிழ்நாட்டையே என் இசையால் தாலாட்டப் போகிறேன் என்றும் செம பில்டப் கொடுக்கிறாராம் மன்சூரலிகான்.
நல்ல நேரம் பார்த்து தொடங்க வேண்டும் என்றால், இவர், ராகுகாலம், எமகண்டத்துக்காக காத்திருந்து கேமராவை ஓப்பன் செய்வார். அந்த அளவுக்கு மற்றவர்களிடமிருந்து எதிர்மறையாக செய்யும் மன்சூரலிகான், லொள்ளு தாதா பராக் பராக் படத்தையடுத்து, இப்போது அதிரடி என்றொரு படத்தை தொடங்கியிருக்கிறார்.
அதிரடி என்ற பெயருக்கேற்ப சில அதிரடிகளையும் இப்படத்தில் செய்கிறாராம் மன்சூர். அதாவது, இதுவரை தயாரிப்பு, நடிப்பு, டைரக்டர் என்பதோடு தனது எல்லையை நிறுத்திக்கொண்டவர், இந்த படத்தில் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என்று மேலும் சில அதிரடி அவதாரங்களை எடுக்கிறாராம்.
அதனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பாடல்களுக்கான டியூனை ரெடி பண்ணி விட்டாராம் அவர். டி.ராஜேந்தர் பாணியில் டேபிளில் அடித்துக்கொண்டே டியூன் போட்டு சில பாடல்களை ரெடி பண்ணி வைத்துள்ளாராம்.
அப்படி தான் உருவாக்கிய டியூன்களை, தன்னை சந்திக்க வரும் சினிமா நண்பர்களிடம், தாளம் தட்டிக்கொண்டே பாடிக்காட்டுகிறாராம் மன்சூர்.
அதோடு, நில்லாமல், இந்த படத்தில் எனக்கு மற்றவர்கள் பின்னணி பாடுவதை விட நானே பாடினால் ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்பதால் எனக்கான பாடல்களை நானே பின்னணியும் பாடப்போகிறேன் என்று சொல்லி, மொத்த பாடல்களையும் தாளம் தட்டியபடி மெய்மறந்து பாடுகிறாராம்.
அதோடு இப்போது இசையால் உங்களை தாலாட்டியது போன்று அதிரடி படம் மூலம் டோட்டல் தமிழ்நாட்டையே என் இசையால் தாலாட்டப் போகிறேன் என்றும் செம பில்டப் கொடுக்கிறாராம் மன்சூரலிகான்.